திருவள்ளூர், அக் 29- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகில் உள்ள தண்டலம் பகுதியை சுற்றியுள்ள காக்கவாக் கம், தொளவேடு, மேல்மாளி கைப்பட்டு, ஏனம்பாக்கம், முக்கரம்பாக்கம், வண்ணாங்குப்பம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களின் மைய பகுதியாக தண்டலம் பஜார் உள்ளது. இந்த பகுதியிலிருந்து ஆயிரத் திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொன்னேரி மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று கல்வி பயின்று வருகின்ற னர். மேலும் பொது மக்கள், மாண வர்கள், பணிக்கு செல்வோர், சென்னை அரசு பொது மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு செல் வோர் மாநகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றன. இதனை தொடர்ந்து தண்ட லம் முதல் சென்னை பிராட்வே வரை என தடம் எண் 593 என்கிற இரண்டு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல தடம் எண் 562 என்ற இரண்டு மாந கர பேருந்துகள் தண்டலம் முதல் அம்பத்தூர் எஸ்டேட் வரையிலும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் சென்னை உட்பட பல்வேறு பகுதி களுக்கு சிரமமின்றி சென்று வந்தனர்.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கண்ட நான்கு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊத்துக்கோட்டை பணி மனையில் இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் திருச்சி, கள்ளக்குறிச்சி, திருப்பதி, காளாஸ்திரி, நெல்லூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று மீண்டும் இரவு 12 மணி அளவில் ஊத்துக் கோட்டை பணிமனைக்கு வந்தடை கிறது. அங்கு இறக்கவிடப்படும் பயணிகள் அங்கிருந்து சென்னை செல்ல பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக வெள்ளி, சனிக் கிழமை களில் ஊத்துக்கோட்டை பணி மனையில் உள்ள பேருந்துகள் மாதவரத்தில் இருந்து காளா ஸ்திரிக்கும், திருப்பதிக்கும் தடத்தை மாற்றி அனுப்புகின்றனர். அவ்வாறு அனுப்புவதால் மாதவரத்தில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், தண்டலம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தண்டலம் கிளைச் செயலாளர் கே.முத்துக்குமார், காக்கவாக்கம் கிளை செயலாளர் இ.ஏகாம்பரம், காக்கவாக்கம் பெண்கள் கிளைச் செயலாளர் எம்.சாந்தி, வண்ணாங்குப்பம் கிளை செயலாளர் எஸ்.சசிகுமார், சிஐடியு நிர்வாகி எம்.செல்வராஜ் ஆகியோர் கூறுகையில், தண்டலம் பகுதியில் இயங்கி வந்த மாநகர பேருந்துகள் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் இயக்க வேண் டும். காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனர். செங்குன்றத்திலிருந்து ஊத்துக் கோட்டை, திருவள்ளூர், பழவேற் காடு, கும்மிடிப்பூண்டி ஆகிய வழித் தடங்களில் அதிகளவில் மகளிருக் கான இலவச பேருந்துகளை இயக்கவேண்டும் என்றனர்.