திருவண்ணாமலை, பிப். 1- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த காரம் ஊராட்சியின் துணை கிராமமான மாலையிட்டான் குப்பத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாய் முடையும் தொழிலில் ஈடுபட்டுள்ள கூலித்தொழிலாளர்கள். வாழ்வாதாரத்திற்கே சிரமமான நிலை யில் வாழும் இவர்கள், குடியிருக்கும் வீட்டிற்கு மாத வாடகை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் காரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு வைத்த தொடர் கோரிக்கையின் அடிப்படையில், இவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கிராம சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதனடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் பரிந்துரை செய்த இடத்தில், சாஜிதா பேகம், அஞ்சலை ஆபிதா, சாலிகத்துல் முனவ்ரா, ஜம்ரூத், ரஹ்மத், பாத்திமா, ரசியா பேகம், வகிதா உள்ளிட்ட 32 குடும்பத்தினர் சிறு குடிசை அமைத்து வசிக்கின்றனர். இந்நிலையில் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு மாவட்ட துணைச் செயலாளர் யாசர் அராஃபத், மாநிலக்குழு உறுப்பினர் அப்துல் காதர் தலைமையில் வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தத்திடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் முருகா னந்தம், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித் துள்ளார்.