districts

img

பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகள்: வேலி அமைக்க சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை, நவ. 25- திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை தடுக்க வேலி அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.சீதா தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார்,“ திரு வண்ணாமலையிலிருந்து விழுப்புரம் செல்லும் தடம் எண் 215 பேருந்து ஏந்தல் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதை உறுதிப்படுத்த வேண்டும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும், விவ சாய நிலங்கள் வன பகுதியை ஒட்டியே இருப்பதால், விளைவித்த பொருட்களை வனப்பகுதி பாதை வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்”என்றார். ஒன்றியச் செயலாளர் எஸ். ராமதாஸ், செயற்குழு உறுப்பினர்கள் எம்.பிரகல நாதன், ப.செல்வன், நிர்வாகிகள் எஸ்.பலராமன், காசிலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.