திருவண்ணாமலை, ஜுலை.25- திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு சிறுகடைகளை அகற்றிவிட்டு, டெண்டர் மூலம் வேறு கடைகளை அமைக்க கோயில் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று ( ஜூலை 25) பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.பாரி தலைமையில் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.