திருவண்ணாமலை, ஜன.30- திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் ஆண்டியா பாளையம் கிராமத்தில் கடந்த 28 ஆம் தேதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கொடி ஏற்றப் பட்டது.்கொடி கம்பத்தை அன்று இரவே ஆண்டியா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் பிடிங்கிச் சென்று விட்டனர். சமூக விரோதிகளால் கொண்டு செல்லப்பட்ட கொடிக்கம் ்பத்தை பெற்றுத்தரக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் வெறையூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. மனுவின் மீது எவ்வித நடவடிக் ்கையும் எடுக்காததால் விவசாயிகள் சங்க தலைவர் எஸ். பலராமன் தலைமையில் வெறையூர் காவல் நிலையம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசா யிகள் சங்க தலைவர் டி.கே.வெங்கடேசன் மற்றும் நிர்வாகி கள் பலர் இந்த காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.