திருவண்ணாமலை,11- திருவண்ணாமலை வட்டம் வடஆண்டப் பட்டு கிராமத்தில் அரசாங்குளம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பஞ்சாயத் துக்கு சொந்தமான 2 சென்ட் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து தகர கொட்டகை அமைத்து பயன்படுத்தி வந்தார். இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலமுறை புகார் செய்தனர். இருப்பினும் அகற்றுவதற்கு வருவாய்த் துறையினரும் பஞ்சாயத்து நிர்வாகம் முன்வரவில்லை. இதனால், தொடர் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் திட்டமிட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை கடந்த மாதம் 22 ஆம் தேதி காவல்துறை யுடன் வருவாய்த்துறையினர் மீட்டெடுத் தனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் ஊராட் சிமன்றத் தலைவருக்கு வேண்டியவர் என்ப தால், ஆக்கிரமிப்பாளரின் தூண்டுதலின் பேரில், அந்த இடத்தின் அருகே இருந்த வாலி பர் சங்கத்தின் கொடிக்கம்பத்தை கிராம நிர்வாக அலுவலகர் இளையராஜா அகற்றி னார். கிராம நிர்வாக அலுவலரின் நடவடி க்கைக்கு வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்து. மேலும், வட்டாட்சியர் அலுவலகத் தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி யது. சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் அபிமாறன், கிளைத் தலைவர் சாந்தமூர்த்தி, செயலாளர் வல்லரசு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பல ராமன், நிர்வாகி பி.பழனி, அ.செல்வம், வழக் கறிஞர் எஸ்.அபிராமன், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ் ஆகி யோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, வாலிபர் சங்க நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து, அதே இடத்தில் மீண்டும் கொடி கம்பம் அமைக்கப் ்பட்டது.