districts

img

சிபிஎம் களப்பணியால் கோரிக்கைகளை வென்று வரும் கலசப்பாக்கம் மக்கள் !

திருவண்ணாமலை, டிச. 24- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கலசப்பாக்கம் தாலு காவில் 52 வருவாய் கிராமங்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாலுகாவில், மிருகண்ட அணையும், சேயாறும் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. பர்வத மலை என்று அழைக்கப்படும் நவிர மலையும் இங்கு அமைந்துள்ளது. கலசப்பாக்கம் தொகுதியில் கடந்த  காலங்களில் திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் சட்டமன்ற உறுப்பி னர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கு அரசு கல்லூரி அமைக்க வேண்டும், மிருகண்ட அணை பாசன கால்வாய்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும், திருவண்ணாமலை - போளூர் பிரதான சாலையில் கலச பாக்கம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும், ஊருக்குள் வாழ  வழியின்றி ஏரி, குளம், குட்டைகளின் ஓரங்களில் குடியிருக்கும் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கி அவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும், தீண்டாமை கொடுமைகள் நிகழ்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன் வைத்து, செங்கொடி இயக்கம் மட்டுமே அந்த பகுதி மக்களுடன் களத்தில் நிற்கிறது.
பழுதடைந்த கிராம சாலைகள்
கலசப்பாக்கம் தாலுகா சீராம் பாளையம் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கிராம சாலைகள் பழுதடைந்து பயணிக்க முடியாத நிலையில் இருந்தது. ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் ரேசன் கடை இடிந்து விழும் நிலையில் இருந்தது. பழுதடைந்த ரேசன் கடையை அகற்றிவிட்டு, புதிய ரேசன் கடை கட்ட  வேண்டும், பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்,பழுதடைந்து கிடக்கும் ரேசன் கடையை சீரமைக்கா விடில் பாடை கட்டி தூக்கி செல்லும்  போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரேசன் கடையை இடித்து புதிய ரேசன் கடையை கட்டும் பணியில் ஈடு பட்டுள்ளது. அதேபோல் உடனடியாக சாலைகளும் சீரமைக்கப்பட்டதால், ஏழை, எளிய மக்களின் துயரங்களுக்கு செங்கொடி இயக்கம் தீர்வை கொடுக்கும் என்ற நம்பிக்கை அந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல், கலசப்பாக்கம் தாலுக்கா பாடகம் கிராமத்தில், 100  நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கா மல் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். கட்சியின்  போராட்டத்தால் மாற்றுத்திறனா ளிகளுக்கு உடனடியாக100 நாள் வேலை வழங்குவதாக வட்டார நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக ஒப்பு தல் வழங்கியுள்ளது. கலசப்பாக்கம் பஜார் வீதியில் மக்கள் பாதுகாப்புக் காக கட்சி முன்வைத்த கோரிக்கையை  ஏற்று சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டுள்ளது. மேல்சோழங்குப்பம் கிராம நிர்வாக  அலுவலகம், பஞ்சாயத்து அலுவல கம், பள்ளி வளாகம் முழுவதும் கழிவு நீரால் சூழப்பட்டுள்ளது. இதை சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆதமங்கலம் பகுதிக் குழு சார்பில் அண்மையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போதே, கழிவுநீர் அகற்றப் பட்டு, மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. அதேபோல் கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், மருத்துவமனைக்கு செல் லும் சாலையை சீரமைக்க வேண்டும்,  விண்ணுவாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளையும் நிறைவேற்ற அதிகாரிகள் உறுதி அளித்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது காரிப்சம்பா நெல் அறு வடை நேரத்தில் கலசபாக்கம் தாலுகாவில் எலத்தூர் மற்றும் கேட்டவரம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் அதிகளவு விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளதால் கூடுதலாக நெல் கொள்முதல் நிலை யங்களை திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த போராட்ட களங்களில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டாரச் செயலாளர் பி.சுந்தர், கலசபாக்கம் வட்டார நிர்வாகி கள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலசபாக்கம் தாலுக்கா மக்களின் கடைசி கோரிக்கை நிறை வேறும் வரை செங்கொடி போராட்டம்  தொடரும் என்று மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தெரிவித்தார். -ெஜ.கண்ணன்