திருவண்ணாமலை, பிப். 8- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 21ஆவது வார்டு தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ந.ராதாகிருஷ்ணன், வந்தவாசி நகரத்திற்குட்பட்ட 1ஆவது வார்டு பகுதியில் வியாபாரிகள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள், சிறு வியாபரிகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார். திமுக மாவட்ட பிரதிநிதி எ.தயாளன், வட்ட பிரதிநிதி நீல.நாதன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் சிவராமன், தாலுகா செயலாளர் அப்துல் காதர், நிர்வாகிகள் பெ.அரிதாசு, பால்ராஜ், மோகன், சுகுமார், தங்கமணி, சி.எம்.பிரகாஷ், ரவிதாசன், விசிக நகரச் செயலாளர் இனியவன், இளைஞர் அணி பொறுப்பாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.