districts

img

கரும்பு விவசாயிகள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்  

திருவண்ணாமலை , ஜூலை. 20-  திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021- 22 அரவைப் பருவத்திற்கு கரும்பு அனுப்பி ஐந்து மாதங்களை கடந்தும் பணம் தராமல் விவசாயிகளை அலைக்கழிக்கும் செய்யாறு சக்கரை ஆலை நிர்வாகத்தையும், இருப்பில் உள்ள சர்க்கரையை விற்பனை செய்ய அனுமதி வழங்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், ஆலையிலிருந்து வாங்கிய ரூ. 22 கோடிக்கான இணை மின்சாரத்திற்கு உரிய பணம் தராமலும், வழிவகை கடன் பெற அனுமதிக்காமலும் காலம் தாழ்த்தி வரும் மாநில அரசை  கண்டித்தும் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் பெ.அரிதாசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ். பலராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி. கே. வெங்கடேசன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், வேலாயுதம், வே.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;