districts

img

எஸ்.கே.பி. கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

திருவண்ணாமலை, மார்ச் 10- திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் கியூ. ஸ்பைடர் எனப்படும் பன்னாட்டு பயிற்சி நிறுவனம் வளாகத் நேர்காணலை நடத்தியது. இந்த நிறு வனம் பொறியாளர்களை தேர்வு செய்து, பயிற்சியளித்து பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் அமர்த்தும் சேவையை செய்து வருகிறது.  மென்பொருள் சேவை செய்யும் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்நிறுவனம்  ஆப்களை தேர்வு செய்து அனுப்பி வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ. 2 லட்சம் ஊதியத்தில் மாணவர்களை பணியமர்த்தி வருகிறது. அதனப்படையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 8 மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். இதில் எஸ்.கே.பி. கல்விக் குழு மத்தின் தலைவர் கு.கருணாநிதி, இணைச்செயலாளர் கே.வி.அரங்க சாமி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்திகிருஷ்ணன், முதல்வர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.