districts

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

 திருவண்ணாமலை. ஜூன் 25- திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணை பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 6 மையங்களில் காவல் துறை உதவி ஆய்வாளர் தேர்வு (ஜூன் 25) நடைபெற்றது. இந்த தேர்வை காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல்துறை உயர் அதிகாரிகள், உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம்  கார்த்திகேயன் கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் இரண்டு நாட்கள் நடைபெறும் காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வில் 1253 பெண்கள் உட்பட 6044 பேர் எழுதுகின்றனர். மின்னணு சாதனங்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்வதை தடுப்பது, காப்பி செய்வதை தடுப்பது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் 600 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 124 கேமராக்கள், 48 நடமாடும் மொபைல் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன”என்றார்.