திருவண்ணாமலை,ஏப்.24- போளூர் ஊராட்சி ஒன்றியம் குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரி யர் அஞ்சலா தேர்தல் அலு வலராக இருந்து தேர்தலை நடத்தினார். வட்டார கல்வி அலுவலர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாஸ்கரன், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வேலா யுதம் ஆகியோர் தேர்தல் பணி, செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். ஆசிரியர் பிரிசில்லா சியோன் வரவேற்றார். ஆசிரியர் பிரதிநிதி டேவிட்ராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.