districts

img

ரூ. 140 கோடியில் பரமனந்தல்-அமிர்தி சாலை மேம்பாடு திருவண்ணாமலையில் முதல்வர் அறிவிப்பு

திருவண்ணாமலை,ஜூலை.9-. திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட எல்லைகளில் ஜவ்வாது மலைப் பகுதியில் வசிக்கும் சுமார் 75 ஆயிரம் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.140 கோடியில் பரமனந்தல்-ஜமுனாமர்த்தூர், அமிர்தி சாலைகள் மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரி வித்தார். திருவண்ணாமலை  மாவட்டத் திற்கு இரண்டு நாள் பயண மாக வருகை தந்த தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்அரசு  விழா வில் பங்கேற்று ரூ. 7027.17 லட்சத்தில் முடிவுற்ற 91 பணிகளை திறந்து வைத்தும், ரூ. 34021.04 லட்சம் மதிப்பிலான246 புதிய  திடப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.  இந்த நிகழ்ச்சியில் கடந்த ஒராண்டில்  நடைபெற்ற திட்டப்பணி கள் குறித்த சாதனை மலரையும் அவர் வெளியிட்டார். அதனை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்,“ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாடவீதி சாலைகள், கான்கிரீட் சாலை களாக தரம் உயர்த்தப்படும். முதல் கட்ட மாக, காந்தி சிலை முதல் திருகூடல் தெரு சந்திப்பு வரை ரூ. 15 கோடி யில் 1 கி.மீ தூரத்திற்குப் பணிகள் நடை பெற்று வருகிறது” என்றார்.