திருவண்ணாமலை, ஜுன் 28- திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் சாலை ஏந்தல், பள்ளி கொண்டாப்பட்டு பகுதியில், நம்மாழ்வார் விவசாய சந்தை என்ற பெயரில் ஒரு சந்தை செயல்பட்டு வந்தது. அங்கு ஜெய் கணேஷ் என்ப வர் ரைஸ் மில் வைத்து 200க்கும் மேற்பட்ட விவசாயி களிடம் சுமார் ரூ.5 கோடிக்கு நெல் கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயிகளுக்கு தராமல் ஏமாற்றி மோசடி செய்துள் ளார். நெல்லுக்கு உரிய தொகையை ஜெய் கணேஷ் விவசாயிகளுக்கு காசோ லையாக வழங்கியதாகவும் அவையனைத்தும் பணம் இல்லை என்று வங்கியி லிருந்து திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
நெல்லுக்கு உரிய பணம் குறித்து விவசாயிகள் ஜெய் கணேசிடம் கேட்டபோது, அவர் உரிய பதிலளிக்க வில்லை, தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு ரைஸ் மில் மூடப்பட்டிருந்தது. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் ஜெய்கணேஷ் தலைமறைவானார்.
இதுகுறித்து ஜூன் 27ஆம் தேதி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவல கத்தில் விவசாயிகள் புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து ஜூன் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் அளிக்க குவிந்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அருண்குமார் தலைமையில் ஒன்று திரண்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லுக்கான பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஜி. பன்னீர்செல் வம், நிர்வாகி ஏ. செல்வம் ஆகியோர் உடன் இருந்த னர்.