திருவண்ணாமலை, மார்ச் 15- திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா கிடைக்காமல் விவ சாயிகள் தவித்து வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு இணை யாக திருவண்ணாமலை மாவட்டம் நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. கரும்பு உற்பத்தியிலும் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இத னால் வழக்கத்தைவிட சம்பா நெல் சாகுபடி மற்றும் கரும்பு சாகு படியிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாகுபடி பயிர்களுக்கு யூரியா, உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான உரக் கடை களில் விவசாயிகள் யூரியா வாங்கு வதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கே.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க, முழுக்க விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். இரண்டு கரும்பு ஆலைகளை மூடியதாலும், ஏற்கெனவே அனுப்பி வைத்த கரும்புக்கான பாக்கித் தொகையை ஆலை நிர்வாகங்கள் உரிய நேரத்தில் வழங்காததாலும், விவ சாயிகள் பாதித்துள்ளனர். மறுபுறத்தில், நெற்பயிர் சாகுபடி அதிகமாக செய்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு தேவையான யூரியா வேளாண்மை துறையிடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்டுத்தும் தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இடைத் தரகர்கள் மூலமாக இரவு நேரங்களில் யூரியாவை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை கிடங்குகளில் அரசு சார்பில் அதிக அளவில் யூரியா இறக்குமதி செய்து விவ சாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். தனியார் உரக்கடைகள் யூரியா பதுக்கி வைப்பதை தடுக்க வேண்டும், அரசு அதிகாரிகள் செய்ய தவறி னால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் களத்தில் இறங்கி பதுக்கல் யூரியாவை மீட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.