districts

img

சாலை வசதியின்றி தவிக்கும் மலை கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் பலாமரத்தூர் ஊராட்சியில் புளிச்சங்கோட்டை, வாழாக்காடு,  சேராமந்தை,  நாச்சமலை, பதிரி, மோலை யனூர், பெரிய கூத்தனேரி, சின்ன கூத்தனேரி உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் சாலை, மின்சாரம், குடிநீர், தெரு விளக்கு, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதி களும் இல்லாமல் தவித்து வரு கின்றனர். இந்த மலை கிராமங்களில் வாழக்காடு கிராமத்தில் மட்டும் 8ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளியில் 3 ஆசி ரியர்கள் மட்டுமே உள்ளனர். உயர் கல்விக்காக 15 கி.மீ. தூரம் உள்ள ஜமுனா மரத்தூர் பகுதிக்குதான் மாணவ, மாணவிகள் செல்ல வேண்டும். கல்லூரிக்கு செல்ல வேண்டு மானால் 40 கி.மீ. உள்ள ஆலங் காயம் அல்லது போளூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்ய நிலை உள்ளதால், பல மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். சாலை வசதி இல்லாத கார ணத்தால் கர்ப்பிணி பெண்கள், முதியவர் ஆகியோரை மருத்துவ மனைக்கு அழைத்துசெல்ல டோலி கட்டி தோள்களில் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த மலை கிராமங்களுக்கு செல்ல சாலையின் குறுக்கே செல்லும் 4 ஓடைகளை கடந்துதான் செல்ல வேண்டும். அனைத்து சாலை களும் சேதமடைந்து காணப்படு கின்றன.

போதுமான சிக்னல் கிடைக்காததால் செல்போனைக் கூட பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் சாமை, கொள்ளு, மக்காசோளம் உள்ளிட்ட விவசாய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மாதத்தில் ஒரு நாள் மட்டும் ரேசன் பொருட்களை டிராக்டரில் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட அந்த மக்களுக்கு கிடைப்பது சிரமமாக உள்ளது. ஜவ்வாது மலையில் கோடை விழா நடக்கும் போ தெல்லாம், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஏற்படுத்தி, சுற்றுலாதலத்தை மேம்படுத்துவதாக அமைச்சர் களும், அரசு அதிகாரிகளும் தெரிவிப்பார்கள். ஆனால் இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் கவனம் செலுத்துவதில்லை என மலை கிராம மக்கள் குற்றச்சாட்டு கின்றனர். அரசும், மாவட்ட நிர்வாக மும் உடனடியாக இந்த மலை மக்களின் அடிப்படைத் தேவை களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அந்த மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். -செந்தாமரைக்கண்ணன்