திருவண்ணாமலை, மார்ச் 24- பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் வேங்கிக்கால் ஆவின் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாநில பொதுச்செயலாளர் கே.முகமது அலி, மாவட்ட பொருளாளர் ஏ.உதயகுமார், பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோகுலம் சுப்பிரமணி, மாவட்ட தலைவர் எஸ்.முருகன் ஆகியோர் பங்கேற்று பேசினர். குழந்தைகளுக்கு சத்துணவில் பால் பவுடர் வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் முழக்கமிட்டனர்.