திருவண்ணாமலை, அக். 3- திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் முறைகேடாக செயல்பட்ட கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செய லாளர் சிவக்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு. ஏழை, எளிய மாணவர்களின் பட்டதாரி கனவை நினைவாக்கி வருகிறது. பெரும் பகுதி கிராமப்புற மாணவர்கள் படிக்கும் இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பாண்டு 2022-23 மாணவர் சேர்க்கைக்கான, முதல் மற்றும் இரண்டாம் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் இரண்டு தேதிகளில் நடை பெற்று 1,600 இடங்கள் நிரபப் பட்டுள்ளது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16, 17 தேதிகளில் நடைபெறும் என முதல்வர் செய்தி வெளியிட்டார். 15, 16 தேதிகளில் நடைபெற்ற சேர்க்கையில் 210 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாகம் கல்லூரி முதல்வரை அவசர, அவசரமாக இடமாறுதல் செய்துள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கல்லூரி முதல்வர் ஏற்கனவே நடத்திய மாணவர் சேர்க்கையை தொடர்ந்து 17ஆம் தேதி நடை பெறவிருந்த சேர்க்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தேதி குறிப்பிடாமல் தன்னிச்சை யாக ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரை கடந்த 26ஆம் தேதி சந்தித்து மாணவர் அமைப்பின் சார்பில் முறையிடப்பட்டது.
மேலும் இதற்கு பல்வேறு அரசி யல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 30ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி, எந்த விதிமுறைகளையும், இட ஒதுக்கீடு முறைகளையும் பின்பற்றாமல் மீதமுள்ள மாணவர் சேர்க்கையை தன்னிச்சையாக நடத்தியுள்ளது. மீதமுள்ள 758 இடங்கள் நிரப்பப்பட வேண்டி யதில் 130 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மோசடியான முறையில் கல்லூரி முதல்வர் தன்னிசையாக சேர்க்கை நடத்தியுள்ளனர். மாண வர்கள் சேர்க்கைக்கான இடங்களை சிலர் பங்கீடு செய்து கொண்டு, மாணவர்களிடம் புரோக்கர் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு சேர்க்கை நடை பெறுவது பெற்றோர்கள் மாண வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தகுதியுள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கல்லூரி முதல்வர் கல்விப் பணியை தாண்டி அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து சால்வை அணிவிப்பது, அரசி யல் கட்சி தலைவர்கள் கல்லூரி முதல்வருக்கு சால்வை அணிவிப்பது மிகவும் வேதனை யாக உள்ளது. கலந்தாய்வு நடை பெறும் போது கல்லூரி முதல்வர் திடீரென வெளியே சென்று விடுகிறார்.
ஆனால் தொடர்ந்து கலந்தாய்வு நடை பெறுகிறது. அதில் துறைத்தலை வர்கள், சேர்க்கை குழு உறுப்பி னர்களோ, நிரந்தர பேராசிரி யர்களோ இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. செப்டம்பர் 30இல் நடைபெற்ற 3ஆவது கலந்தாய்வு என்பது, தன் விருப்பத்திற்கு முதல்வரால் நடத்தப்பட்டது. எனவே, சேர்க்கப்பட்ட 130 மாணவர்களை தவிர மற்ற மாணவர் சேர்க்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், இன சுழற்சி முறை (இடஒதுக்கீடு) அடிப்படையில், தகுதியுள்ள மாண வர்கள் சேர்க்கப்பட்ட முழு விவரங்களையும் செய்தித்தாள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கையில் அனைத்து துறை தலைவர்களின் கையொப்பம் பெறப்பட்டதை வெளிப்படை தன்மையுடன் வெளியிட வேண்டும். சில தனி நபர்கள் ஆதிக்கத்தின் பிடியில் உள்ள அரசு கலைக் கல்லூரி நிர்வாகத்தை முழுமையாக விடு விக்க வேண்டும். கல்லூரி நிர்வாக வழிகாட்டு தலை பின்பற்றாமல், தன்னிச்சை யாக செயல்படும் கல்லூரி முதல்வர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.