districts

img

வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை, மார்ச்.26- திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வரும் வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடு ஆரணியை அடுத்த சைதாப்பேட்டையில்  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் பி.லட்சுமணன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் இ.கெங்காதுரை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மத்தியகுழு உறுப்பினர் ஏ. வி.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான  பி.டில்லிபாபு, வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சேட்டு, மாநில பொருளாளர் ஜி.ஏழுமலை, வட்ட பொருளாளர் சி.ரவிச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி .கே .வெங்கடேசன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம் .மாரி முத்து, சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் பெ. கண்ணன், சிபிஎம் நிர்வாகி சி.அப்பாசாமி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும், ஊட்டி பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், வேட்டைக்காரன் இன மக்களிடையே நடத்திய ஆய்வு அறிக்கையை உடனடியாக தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும், வேட்டைக்காரன் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, இலவச வீடு, முதியோர், ஆதரவற்றோர் மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.