districts

காய்கறி பயிரிடுவோருக்கு இடுபொருள் மானியம்

கீழ்பென்னாத்தூர், பிப்.6- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் காய்கறி பயிரி டுவோருக்கு இடு பொருள் மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து வேளாண் மைத்துறை வட்டார உதவி இயக்குநர் கண் ணன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:- கீழ்பென்னாத்தூர்  வட்டாரத்தில் விவாயிகள் பயிரிடுவதை ஊக்குவிக் கும் வகையில் கத்தரிக் காய், மிளகாய், தக்காளி, பீர்க்கங்காய், வெண்ட க்காய், புடலை, வெள்ளரி, பூசணி உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள இடு பொருள் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை சார்ந்த இடு பொருட்களும் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், பயன்பெற விரும்பும் விவசாயிகள் அடங்கல், சிட்டா, ஆதார் மற்றும் குடும்பஅட்டைநகல் ஆகிய ஆவணங்களுடன் தோட்டக்கலை துறை கீழ்  பென்னாத்தூர் வட்டார உதவி இயக்குநர் அலுவல கத்தில் விண்ணப்பிக்க லாம். இவ்வாறு அதில் தெரி வித்திருக்கிறார்.