districts

img

சமுதாய கூடத்தை சீரமைப்பேன்: பெரணமல்லூர் சிபிஎம் வேட்பாளர்

திருவண்ணாமலை, பிப். 8- பெரணமல்லூர் பேரூரா ட்சியில் உள்ள சமுதாய கூடத்தை சீரமைப்பேன் என சிபிஎம் வேட்பாளர் கௌதம் முத்து உறுதியளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியின் 1ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கௌதம் முத்து அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் ஏழை, எளிய விவசாயக் குடும்ப ங்களைச் சேர்ந்தவர்கள், குடும்ப நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் சமுதாயக் கூடத்தில் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி உள்ளது. தான் பேரூராட்சி வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட உடன், பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி, உடனடியாக சமுதாயக் கூடத்தை சீரமை ப்பேன் என தெரிவி த்தார். இதில் பெரணமல்லூர் பகுதிச் செயலாளர் பெரணம ல்லூர் சேகரன், நிர்வாகி ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.