கலசப்பாக்கம்,பிப். 5- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஜெ.ஜெ நகரில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வழங்க ப்படவில்லை. எனவே ஜெ.ஜெ. நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகி எஸ்.எம்.சேகர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் கோபமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் பவுனு வெள்ளி கண்ணுவின் மகன் முரளி என்பவர், எஸ்.எம்.சேக ரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இழிவாக பேசி தாக்கி யுள்ளார். முரளியின் ரவுடித் தனத்தை கண்டித்தும், அவரை கைது செய்ய வலி யுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலசப்பாக்கம் பஜார் வீதி யில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இதில் கிளைச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தாலுகா செய லாளர் பி.சுந்தர், நிர்வா கிகள் கே.கே.வெங்கடே சன், ச.குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றி னர்.