திருவண்ணாமலை, ஜூலை 15- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருவண்ணா மலை மாவட்ட 4ஆவது மாநாடு திரு வண்ணாமலையில் வெள்ளி யன்று (ஜூலை 15) துவங்கியது. இம்மாநாட்டையொட்டி பொதுக்கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலை வர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாநிலப் பொரு ளாளர் கே. ஆர். சக்கர வர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் எஸ். சண்முகம், மாவட்டத் தலைவர் சி. ரமேஷ் பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். சிவாஜி, எம்.எஸ். சங்கர் ஆகி யோர் உரையாற்றினர். முன்னதாக, திரு வண்ணாமலை பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகிலிருந்து ஊர்வ லம் நடைபெற்றது, இதில் மாற்றுத்திறனாளிகள் திரளாக பங்கேற்றனர்.