districts

img

கொடி பயணம்: திருவண்ணாமலையில் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை,அக். 31- கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள சிஐடியு 15ஆவது மாநில மாநாட்டிற்கு காஞ்சி புரத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கொடி பயணம் திங்களன்று திரு வண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தது.  வந்தவாசி கோட்டை மூலை அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்ட தலைவர் கே.காங்கேயன், பொருளாளர் எஸ்.முரளி, செயலாளர் இரா.பாரி, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் கே.பகத்சிங் தாஸ் ஆகியோர் பேசினர். அதேபோல் ஆரணி, செய்யாறு பகுதிகளில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.சிவராஜ், கே.நாகராஜன், எம்.வீரபத்திரன், வி.சங்கர், ஏ.சேகர், துணைச் செயலாளர்கள் எம்.பாலாஜி, எஸ்.தண்ட பாணி, பி.கணபதி, ஆர்.கமலக் கண்ணன், கே.சரவணன், எம்.பார்வதி ஆகியோர் பேசினர். விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.பலராமன், டி.கே.வெங்கடேசன், ஆர்.உதயகுமார், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எம்.பிரகலநாதன், கே.கே.வெங்கடேசன், எஸ்.பாலசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

;