districts

img

வைக்கோல் வாகனத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை, பிப்.8-  செங்கம் அடுத்த குயிலம் ஊராட்சி கனிகாரன் கொல்லை கிராமத்தில் வைக்கோல் ஏற்றி வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த செல்லள்ளி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவருக்கு சொந்தமான வாகனம் மின்கம்பி உரசியதால் வாகனத்தில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. வாகனமும் முழுவதும் எரிந்து கருகியதை தீய ணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான மீட்பு பணியாளர்கள் தீயை கட்டுப்படுத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் 3 மின்கம்பங்கள் முறிந்து சேதம் ஏற்பட்டது.வாகன ஓட்டி மணிகண்டன் என்பவருக்கு கையில் தீப்பிடித்ததால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.