districts

img

கரும்பு காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை

திருவண்ணாமலை, ஜூன் 13 - கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தால் கரும்பு, மணிலா பயிர்கள் கருககுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தச்சம்பட்டு, வெறையூர், பெருமணம், விருதுவிளங்கினான், சின்ன கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, அல்லிகொண்டப்பட்டு, தலையாம்பள்ளம், சதாகுப்பம், பழையனூர் ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அந்தப் பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து மற்றும் பருவகால பயிராக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கியதையடுத்து, அனைத்து கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்ததாலும், பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததாலும் கரும்பு பயிர் காய்ந்து கருகி போய் விட்டது. கோடை மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் கரும்பு மட்டுமின்றி மணிலா உள்ளிட்ட பயிர்களும் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

;