districts

img

அடக்குமுறையை ஏவினாலும் அஞ்சமாட்டார்கள்

திருவண்ணாமலை,பிப்.23- அடக்குமுறையை ஏவும் பாஜக அர சுக்கு இந்திய விவசாயிகள் மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என கே.  பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் வெள்ளியன்று (பிப்.22)  செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- ஒன்றிய பாஜக அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை-எளிய மக்க ளுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  

தலைநகர் தில்லி யில் போராடும் விவசாயிகள் மீது அடக்கு முறைத் தாக்குதலை நடத்தி வருகிறது. மோடியை நம்பிய சில விவசாய இயக்கங்கள் கூட தற்போது தில்லியில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. விவசாயிகள் தில்லிக்கு வருவதைத் தடுப்பதற்காக சாலைகளில் குழிகள் வெட்டி, கம்பிகளை நட்டு தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் ஒன்றிய பாஜக அரசின் செயல் எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். ஒன்றிய மோடி அரசின் இந்த அராஜ கத்தை கண்டித்து நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டம் நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பல கட்டங்களாக பல இடங்களில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறுகிறது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் போரா ட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வரு கிறது. நிவாரணம் தராதவர் இங்கே வருவது ஏன்? சென்னை, தூத்துக்குடி, நெல்லையில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு மாநில அரசு நிவாரணம் கேட்டபோது, ஒரு  பைசா கூட கொடுக்காத பிரதமர் மோடி எதற் காக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்? தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள். ராமர் பெயரைச் சொன்னா லும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு கிடைக்காது. பாஜக போட்டியிடும் அனை த்து தொகுதிகளிலும் டெபாசிட்இழக்கும்.

  வரவேற்பு தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு உட்கூறு பிரிவு சட்ட மசோதாவை மாநில  அரசு நிறைவேற்றியுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் தொகை விழுக் காட்டிற்கு ஏற்ப அந்த மக்களின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றியதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். செய்யாறு சட்டமன்ற தொகுதி மேல்மா சிப்காட் விவகாரம் குறித்து செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதி லளித்த கே. பாலகிருஷ்ணன், விவசாயி கள் கருத்து கேட்காமல், ஒப்புதல் பெறா மல் நிலத்தை கையகப்படுத்த கூடாது” என்றார்.