திருவண்ணாமலை, மார்ச் 14- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் கிராமத்தில் 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்கள் குடிமனை பட்டா, மின் இணைப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். வீட்டுமனைப் பட்டா, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி, அரசு நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், வானா புரம் சர்வே எண் 57/9இல் 37 குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் இரா.அண்ணாமலை தலை மையில் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் சங்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தகுதியுள்ள 8 பேருக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மின் இணைப்பு வழங்கு வதற்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டது. மேலும், உரிய சான்று களை அளித்தால், மீதமுள்ள வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து, கிராமத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் தனலட்சுமி, தலைமை நில அளவையர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், மனைப்பிரிவுகளை அளவீடு செய்து பட்டா வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மனைப்பட்டா வழங்கக் கோரிய பழங்குடியின மக்கள் அதற்குரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.