திருவண்ணாமலை மாவட்டம், கண்ண குருக்கை கிராமத்தில் வேட்டைக்காரன் இன மக்களின் வீடுகளை அகற்றுவதை கைவிடக் கோரியும், அந்த மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் வேண்டியும் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லி பாபு, ஏ.வி.சண்முகம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டி.கே. வெங்கடேசன், காமராஜ், ஏ.நடராஜன் ஆகியோர் பேசினர்.