திருவண்ணாமலை,மார்ச் 19- வந்தவாசி வட்டத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு குடிநீர், மின்சாரம், வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று கேட்டு வந்தவாசியில் மலைவாழ்மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மலைவாழ்மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலை மையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், மாநில பொதுச் செய லாளர் இரா.சரவணன் கண்டன உரை யாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ப. செல்வன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செய லாளர் அப்துல் காதர், மலை வாழ்மக்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர், ராமதாஸ், ஏழுமலை, மாவலவாடி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன. இதில் வந்தவாசி கோட்டத்தில் உள்ள பழங்குடி ,காட்டுநாயக்கன், இருளர் இன மக்கள், விண்ணப்பித்த அனைவருக்கும் பழங்குடி நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும், வந்த வாசி வட்டத்தில் உள்ள பழங்குடி காட்டுநாயக்கன் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடிநீர், மின்சாரம் உடனே வழங்க கேட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வட்டாட்சியரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நலவாரிய அட்டையில் திருத்தம் செய்து 11 பேருக்கு வழங்கப்பட்டது. கீழ்குவளைவேடு கிராமத்தில் 26 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா அளந்து அத்து காண்பிக்கப்பட்டது, மேலும், கிராமங்களில் குடிநீர், மின்சாரம் தடை இல்லாமல் உடனே வழங்கப்பட்டது. வெம் பாக்கம் தாலுகாவில் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் 4 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. நல வாரிய அடையாள அட்டை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, முற்றுகைப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.