districts

img

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிப்படி எம்ஆர்பி மூலம் பணிக்கு வந்த ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பிரேம்குமாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரி, மாநில துணைத் தலைவர் மா.சுதாகரன், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பரிதிமால் கலைஞன், மாவட்ட இணைச்செயலாளர் புனிதா, மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் ஹேமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் சிசிலி காருண்யா, பொருளாளர் லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.