districts

img

மேம்பாலம் அமைக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம் கிராமம் காளியம்மன் கோவில் அருகே ஆற்றங்கரையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், மிருகண்டா அணை பகுதி வரை தார் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பி.சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார் பேசினார்.