districts

img

செங்கம் நகர மக்களுக்கு குடிநீர் வசதி கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகர மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டாரச் செயலாளர் ஏ.லட்சுமணன், நகர குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.