districts

img

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம்

திருவண்ணாமலை,நவ.9- திருவண்ணாமலையில் மாற்றுத்  திறனாளிகளுக்கான குறைதீவுக் கூட்டம் மாதமாதம் நடைபெற்று வந்த நிலையில், மூன்று மாதமாக அந்த கூட்டம் நடத்தப்பட வில்லை. இந்த நிலையில், திரு வண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நவ.8 அன்று கூட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டது. அன்றைய தினம் பவுர்ணமி என்பதால், அன்றைய தினம் கோவிலுக்கு அதிக அள வில் கூட்டம் வந்ததால், குறைந்த அளவே கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகளும் பெரும் சிரம மத்தை சந்தித்தனர்.   இதனையடுத்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. பிறகு, கூட்டம் உடனடியாக ரத்து செய்த அதி காரிகள் நவ.9 அன்று கூட்டத்தை மீண்டும் நடத்தினர். திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளிகளை, அலு வலகத்திற்கு வெளியில் சிமெண்ட் மற்றும் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த வாகன நிறுத்தும் இடத்தில் குறைதீர்வு கூட்டத்தை நடத்தினர்.  “இந்த கூட்டம் பெயரளவுக்கு நடத்தப்படுகிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தீர்ப்பற்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என வேதனை தெரிவித்தனர். இனி வரும் காலங்களிலாவது,  மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை கொடுத்து, தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தினர்.