districts

img

வந்தவாசியில் தமுஎகச பொன்விழா தொடக்கம்

திருவண்ணாமலை, ஜூலை14- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொன்விழா தொடக்கம் நடைபெற்றது.

கிளைத் தலைவர் பூங்குயில் சிவக்குமார்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் கவிஞர் தமிழ்ராசா, துணைச்செயலாளர் எம்.பி.வெங்க டேசன் முன்னிலை வகித்தனர். கிளை செய லாளர்   சாந்தி  வரவேற்றார். தமுஎகச  திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் முத்துவேலன் படைப்பு-பண்பாடு-கருத்துரிமை” என்று பொன்விழா மாநாடு முன்னெடுக்கும் கருப்பொருள் குறித்து சிறப்புரை ஆற்றினார். 

சங்கத்தின் மூத்த தலைவர்களான பெ.அரிதாசு,சோலை. பழனி, என்.ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிஞர் தமிழ் ராசா கவுரவிக்கப்பட்டார்.

 நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ரசீனா, பூவிழி, வீனஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ரமேஷ்கண்ணன், பாரதிமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிறைவாக,கிளை பொருளாளர் ச. காசி நன்றி கூறினார்.