திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகளப்போட்டியையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர், பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ் மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) கார்த்திகேயன், நளினி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.