திருவண்ணாமலை, டிச.20- ஆட்டோ தொழிலாளர்களின் வீட்டு மனைகளை பெயர் மாற்றம் செய்ய, பத்திரப்பதிவு துறையும், காவல் துறை யும் அலைக்கழிப்பதைக் கண்டித்து திரு வண்ணாமலை பத்திரப்பதிவு அலுவல கத்தில் செவ்வாயன்று (டிச.20) ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை-வேலூர் சாலை யிலுள்ள இனாம்காரியந்தல் பகுதியில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களுக்கான ஆட்டோ நகர் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ளவர்க ளின் வீட்டுமனை ஆவணங்கள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளிடம் உள்ளது. முன்னாள் நிர்வாகிகள் பணத்தை கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதால் தற்போது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பழைய நிர்வாகிகளிடம் உள்ள ஆவ ணங்களை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வீட்டுமனைகளை பெயர் மாற்றம் செய்ய புதிய நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழிகாட்டப்பட்டது. ஆனால் பத்திர பதிவுத் துறையில் அந்த வழிகாட்டுதல் ஆவணங்கள் போதாது, முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வீட்டு மனைகளை பெயர் மாற்ற முடியும் என்று அலைக்கழிக்கின்றனர். இதனால் போராட்டம் நடத்தினர்.