districts

img

வீடுகளை அகற்ற முயற்சி: செங்கொடியுடன் திரண்ட பொது மக்கள்

திருவண்ணாமலை,ஜூலை 13- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்திலுள்ள எடப்பறை, கேளூர உள்ளிட்ட பகுதிகளில் ஏழை-எளிய மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களது குடி யிருப்புகள் நீர்நிலைகளில் உள்ள தாககூறி, அந்த வீடுகளை அகற்றப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, புதனன்று (ஜூலை 13) எடப்பிறை மற்றும் கேளூர் கிராமங்களில் பாதிக்கப்படும் மக்கள் செங்கொடியுடன் ஒன்று திரண்டனர். குடியிருக்க வீடு இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு அரசே வீடு கட்டித்தர வேண்டும், அது வரைக்கும் தற்போது குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தினர்.  இந்த போராட்ட களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ரவிதாசன், சிவாஜி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீர பத்திரன், ப.செல்வன் ஆகி யோர்  கலந்து கொண்டனர். இதனை யடுத்து, அரசு அதிகாரிகள் வீடு களை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.