திருவண்ணாமலை,மே. 16- திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் டாணாக்காரன் திரைப்படக்குழுவுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கிளைத் தலை வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், திரைக் கலைஞர்கள் போஸ் வெங்கட், பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். படக்குழுவினரை பாராட்டி தமுஎகச திரு வண்ணாமலை மாவட்டச் செயலாளர் மு.பாலாஜி, மாநிலக் குழு உறுப்பினர் சிராஜூதீன் உரையாற்றினர், காவல்துறை சீர் திருத்தம் குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ், சிறப்பு ரையாற்றினார். கிளை பொருளாளர் பரிதிமாற் கலைஞன் நன்றி கூறினார்.