திருவண்ணாமலை, மார்ச் 2- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரி லுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர் பதவி காலி யாக உள்ளது. கால்நடை உதவி யாளர் கூட இல்லாத நிலையில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இறப்புக்கு உள்ளாகின்றன. மேலும், கோமாரி என்னும் கொள்ளை நோயால், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனையில் உடனடியாக மருத்துவர் மற்றும் உதவியாளர்களை நிய மனம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்தவாசி வட்டாரச் செயலாளர் அ.அப்துல்காதர் தலைமையில் கோட்டை மூளை முதல் வட்டாட்சி யர் அலுவலகம் வரை, மாடு, கன்று, மற்றும் கோழிகளுடன் உரிமை யாளர்கள் ஊர்வலமாக வந்து வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.இதில் இடைக்குழு உறுப்பி னர்கள் அரிதாசு, சுகுமார், சேட்டு, ஆர்.ராமசந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சி.எம்.பிரகாஷ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.