திருவண்ணாமலை,டிச.15- திருவண்ணாமலை மாவட் டம், போளூர் அடுத்த படவேடு பகுதியில் மாண்டஸ் புயல், சூறாவளி காற்றில் பாதிக்கப் பட்ட வாழை சாகுபடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பார்வையிட்டனர். போளூரை அடுத்த பட வேடு, மல்லிகாபுரம், சின்ன புஷ்பகிரி, புஷ்பகிரி, ராம நாதபுரம், துரிஞ்சாபுரம், ரெட்டைதார், ரெட்டிபாளையம் மற்றும் சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் வாழை பயிர் நடவு செய்தி ருந்தனர். அறுவடைக்கு நிலையில் இருந்த 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் காற்றால் முற்றிலும் முறிந்து சேதமடைந்துள்ளது. இந்நிலையில், சேதமான வாழைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு ஊறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் சிவாஜி, தாலுகா செயலாளர் ரவிதாசன், விவசாயிகள் சங்க நிர்வாகி உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பிறகு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.