districts

img

100 நாள் வேலை திட்டத்தில் ரூ. 30 கூலி வழங்குவதா?விவசாயிகள் நூதனப் போராட்டம்

திருவண்ணாமலை,ஜூலை15- மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தினசரி கூலி ரூ.30 வழங்கப் படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு, விவசாயிகள் மண்ணை சாப்பிடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை யில் இந்த நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.