districts

நூல் விலை மீண்டும் கிலோவிற்கு ரூ.40 உயர்வு பின்னலாடை துறையினர் அதிர்ச்சி

திருப்பூர், மே 2- பருத்தி நூல் விலை கிலோவிற்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது பின்ன லாடை தொழில் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வால் பின்னலாடை தொழிலே முடங்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. பின்னலாடை துறையின் முக்கிய  மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி பஞ்சு விலையேற்றம் காரண மாக கடந்த 18 மாதங்களாக நூல் விலை  உயர்ந்து வருகிறது. மாதந்தோறும் நூல் விலை அதிகரிப்பால் புதிய ஆர் டர்களை எடுப்பதில் பின்னலாடை துறையினர் தயக்கம் காட்டி வருகிறார் கள். நூற்பாலை சங்கத்தினர் மாதந் தோறும் 1 ஆம் தேதி நூல் விலையை அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் மே மாதத்திற்கான விலை திங்க ளன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நூல் விலை மீண்டும் கிலோவிற்கு ரூ.40 உயர்த்தப்பட்டு உள்ளது. ஒவ் வொரு ரகத்திற்கு ஏற்றபடி கடந்த மாதம் 360 முதல் 430 ருபாய் வரை  விற்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 400 ருபாய் முதல் 470 ருபாய் வரை விற் கப்படும் நிலை உருவாகியுள்ளது.  ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக் கான வரியை நீக்க வேண்டும் என்று  தொழில்துறையினர் கோரி வந்த போதும் ஆரம்பத்தில் ஒன்றிய அரசு  இறக்குமதி வரியை ரத்து செய்ய மறுத்து விட்டது, நெருக்கடி முற்றிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறக்குமதி வரி 11 சதவிகி தத்தை செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி  வைப்பதாக ஒன்றிய நிதித் துறை அறி வித்தது.

எனினும் காலதாமதமான இந்த அறிவிப்பினால் ஜவுளித் தொழில் துறையினர் பயன் அடைய  முடியவில்லை. குறிப்பாக வெளிநாட் டிலும் பஞ்சு விலை அதிகமாக இருப் பதால் அங்கிருந்து இங்கு கொள்முதல் செய்தாலும் உள்நாட்டு சந்தை விலை யைவிட அதிகமாக உள்ளது. அத்து டன் கண்டைனர் தட்டுப்பாடும் இருப்ப தால் உடனடியாக கொள்முதல் செய் தாலும் மூன்று மாத காலம் கழித்துதான் பருத்தி பஞ்சு கிடைக்கும் என்ற நிலை யும் உள்ளது. எனவே வெளிநாட்டுக்கு பஞ்சு  ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க  வேண்டும். உள்நாட்டு தேவை போக  மீதம் உள்ள பஞ்சை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட வரைமுறைகளை ஒன்றிய அரசு கடைபிடித்து, உள்நாட்டு பின்ன லாடை தொழிலை காப்பாற்ற வேண் டும் என்று, பின்னலாடை தொழில் துறையினர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். எனி னும் ஒன்றிய அரசு இதுகுறித்து எவ்வித  நடவடிக்கை எடுப்பதாக தெரிய வில்லை. இந்த சூழ்நிலையில் பின்ன லாடை விசைத்தறி உள்ளிட்ட ஒட்டு மொத்த ஜவுளி தொழில் துறையினரும்  என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.