ஜெயின் இரிகேசன் சிஸ்ட்ம்ஸ் லிட் நிறுவனத்தில் தொழிலாளர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து டிச.27 ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூக்க ஏலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் என்ற விவசாய பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பல நூறு தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையாக மாதமாதம் சம்பளம் வழங்காமல் இருந்த நிலையில், சிஐடியு தொழிற்சங்கத்தின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி தற்பொழுது முறையாக சம்பளம் வழங்கபட்ட நிலையில், கடந்த மாதம் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் மாநிலத்தின் பல இடங்களுக்கு 29 தொழிலாளர்களை பணி மாறுதல் செய்து உத்தரவிட்டது. பணி மாறுதல் குறித்து பல முறை நிர்வாகத்தின் கவனத்திற்கு தொழிற்சங்கத்தின் சார்பில் கொண்டு சென்றும் நிர்வாகத்தின் நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லாதால், தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுவோம் என தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிறுவனத்தில் எவ்வித தவறுகளும் செய்யாத தொழிலாளர்களை பணி மாறுதல் செய்த உத்தரவை திரும்ப பெற தொழிலாளர் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.