திருப்பூர், ஜூன் 16 - திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிக ளில் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் பல இடங் கள் நீரில் மூழ்கி போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த சூழ்நிலையில் திடீரென மாலை நேரத்தில் திருப்பூர் மாநகர பகுதிகளான அவினாசி சாலை, பல்லடம் சாலை, செவந்தாம்பா ளையம், ராக்கியாபாளையம், வெள்ளியங் காடு நால்ரோடு, ஆண்டிபாளையம், கரு வம்பாளையம், ராயபுரம், செரிப் காலனி, மண்ணரை, காமராஜர் சாலை, கல்லூரி சாலை, பெருமாநல்லூர் சாலை என பரவ லாக பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. கன மழையின் காரணமாக கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலா வது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அணைப்பாளை யம் பாலம், ஸ்ரீ சக்தி தியேட்டர் பாலம் உள் ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. நெசவாளர் காலனி பள்ளி மைதானம் முழுவதும் குளம் போல் நீர் தேங்கியது. இது போல் பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. பொது மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்தனர். திருப்பூர் நகரில் கழிவுநீர், மழை நீர் வெளியேறிச் செல்ல முறையான கால் வாய் கட்டமைப்பு இல்லாததால் ஒரு மணி நேர மழைக்கே பல பகுதிகளிலும் நீர் தேங்கி பொது மக்களும், போக்குவ ரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தொலைநோக்கு அடிப்படையில் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் வடி கால் ஏற்படுத்திட வேண்டும் என பொது மக் கள் கூறினர்.