districts

சேவூர் : மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மூவர் கைது

அவிநாசி, ஜன.6- சேவூரில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேவூர்  கைகாட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிலையம் மற்றும் பழுது நீக்கம் நிலை யம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இருசக்கர வாகனம் பழுது நீக்க சென்ற மூன்று இளைஞர்கள், மது அருந்திச் சென்று விற்பனை நிலைய ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அக்கடை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள், சேவூர் தேவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (23), அசநல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி (20) மற்றும் அதே பகுதி யைச் சேர்ந்த அஜய் (22) என்பது தெரியவந்தது. இதைய டுத்து வழக்குப்பதிவு செய்த சேவூர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

;