districts

ஆதார் அட்டை பதிவு அலைக்கழிப்படுவதாக பொதுமக்கள் புகார்

அவிநாசி, ஏப்.2- புதிய ஆதார் அட்டை எடுக்க, திருத்தம் செய்ய, ஏராள மான பொதுமக்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளா கம், அவிநாசி மற்றும் சேவூரில் உள்ள தபால் நிலைய ஆதார் சேவை மையங்களுக்கு செல்கின்றனர். அவிநாசி வட்டாட்சி யர் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால், அவி நாசி பகுதியைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள தபால் நிலைய ஆதார் சேவை மையத்திற்கு செல்கின்றனர். அங்கு ஆதார் பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டிருப்பதாக அலு வலர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல, சேவூர் தபால் நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறையால் வாரத்தில் இரு நாள்கள் (செவ்வாய், வெள்ளி) மட்டும் தலா 10 பேருக்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்து தருகிறார்கள். அதற் கும் காலை 7 மணிக்கு சேவூர் தபால் நிலையத்தில் வரி சையில் நின்று டோக்கன் பெற வேண்டும். மேலும் ஊழியர் கள் பற்றாக்குறையால் புதிய ஆதார் கார்டு எடுப்ப தில்லை என, தபால் ஊழியர்கள் கூறுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆகவே சம்மந்தப்பட்ட நிர்வாகி கள் உரிய கவனம் செலுத்தி, தபால் அலுவலகத்தில் ஆதார்  சேவைப்பணியை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.