districts

img

பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து தொடர்ந்து 14 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.

ஜெயின் இரிகேசன் சிஸ்ட்ம்ஸ் லிட் நிறுவனத்தில் தொழிலாளர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் நடவடிகைகயை கண்டித்து கடந்த மாதம்  27 ஆம் தேதி முதல் தொடர்ந்து 14 ஆவது நாளாக நிறுவனத்தில்  உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலூக்க ஏலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் என்ற விவசாய பொருள்கள்  தயாரிக்கும்  நிறுவனத்தில் பல நூறு தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையாக மாதமாதம் சம்பளம் வழங்காமலும் தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்தாமல்  இருந்த நிலையில், சிஐடியு தொழிற்சங்கத்தின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி தற்பொழுது முறையாக சம்பளம் உள்ளிட்ட சட்ட சலுகைகளை பெற்ற நிலையில் , தொழிற்சங்கத்தில் சேர்ந்தார்கள் என்ற காரணத்திற்காக  தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான  மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுபவம் இல்லாத வேலைகளுக்கு செல்ல 29 தொழிலாளர்களை  பணி மாறுதல்  செய்து உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களை   பணி மாறுதல் செய்த நிர்வாகத்திடம்  தொழிற்சங்கத்தின் சார்பில்  பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பயனும் இல்லாமல் போனதால்,  தொழிலாளர்களுக்கு பணி மாறுதல் நடவடிக்கையை நிர்வாகம் கைவிடும் வரை  நிறுவனத்தின் உள்ளே அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தொழிலாளர்களின் நியாயமன போராட்டம் அரசிற்கும் நிர்வாகத்திற்கும், தெரிவிக்கும் வகையில் நிறுவனத்தின் முன்பு தொழிலாளர்களின் குடும்பங்களுடன் தர்ணா போராட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல வடிவங்களில் போராட்டம் நடத்தியும் கடந்த 14 நாட்களாக நிறுவனத்தின் நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லை .

தொழிலாளர்கள் கடுமையான பனி காலத்தில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் எற்பட்டு வருவதை தொழிலாளர் துறையும் , மாவட்ட நிர்வாகமும்  கவனத்தில் கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.