திருப்பூர் ஏப்.26- குமாரபாளையம் அரசு நடு நிலைப் பள்ளியில் மாணவிகளை கழி வறைச் சுத்தம் செய்த வைத்த ஆசிரி யர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கல்கிராஜ், மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் மூலனூர் காவல் ஆய்வாள ரிடம் வியாழனன்று அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா கொளத்துப்பாளையம் பேரூராட்சி குமாரபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வரும் ஸ்ரீநிதி மற்றும் கனிஷ்கா என்கிற கருங்காலிவலசு பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதாக சமூக வலைதளங்களிலும், தினசரி நாளிதழ்களிலும் வந்த செய்தியறிந்து, எங்கள் அமைப்பின் சார்பில் கள ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் இந்தச் சம்பவம் உண்மை என்று தெரியவந்துள்ளது.
பள்ளியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் மூன்று மாத காலமாக கழிவறையைச் சுத்தம் செய்ய வருவதில்லை. எனவே பள்ளி தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி மற்றும் வகுப்பு ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் தலித் மாணவிகளான ஸ்ரீமதி மற்றும் கனிஷ்கா ஆகிய இரண்டு மாணவி களையும் தினந்தோறும் பள்ளிக்கு வந்தவுடன், கழிவுறையைச் சுத்தம் செய்தால்தான் வகுப்பறைக்குள் அனுமதிப்பேன் என மிரட்டி தினமும் சுத்தம் செய்ய வைத்துள்ளனர். இந்த வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.