திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரத்திற்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் காலனி கிளை உறுப்பினரும், கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினருமான கே. சௌந்தரராஜன், எஸ்.சாரதாமணி தம்பதியினரின் குடும்பத் திருமண விழாவில் மணமக்கள் எஸ்.ஜீவானந்தம், எஸ்.பவித்ரா ஆகியோர் ஞாயிறன்று தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.25 ஆயிரத்தை, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. உன்னிகிருஷ்ணன், கே.ரங்கராஜ், டி. ஜெயபால், ச.நந்தகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, நகரக் குழு உறுப்பினர் அ.உமாநாத், பாத்திரத் தொழிலாளர் சங்க பொருளாளர் குபேந்திரன் மற்றும் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடனுள்ளனர்.